ஆப்நகரம்

மழை வர வேண்டி இளம் நாய்களுக்கு திருமணம்... இசை, விருந்து என கோலாகல கொண்டாட்டம்!

மழை வர வேண்டி இளம் நாய்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jan 2021, 9:35 pm
கல்வியறிவு விகிதம் உயர்ந்தாலும் மூடநம்பிக்கைகளுக்கு முடிவே இல்லை என்பது போல தெரிகிறது. மழை இல்லாமல் வாடிய கிராமவாசிகள், மழை வேண்டி நாய்களுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.
Samayam Tamil Dog wedding


மத்திய பிரதேச மாநிலம் பண்டெல்காந்த் பகுதியில் உள்ள குக்கிராமத்தில் மழை வர வேண்டி கொலு, ராஷ்மி என்ற இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின்போது, இரு நாய்களும் வாலாட்டியபோது மகிழ்ச்சியின் குறியீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனவரி 16 முதல் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும்: இவர்களுக்குதான் முன்னுரிமை!
திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அண்டை கிராமத்தில் உள்ள மக்கள் இணைந்து இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் மழைக் கடவுள் மகிழ்ந்து நிவாரி மாவட்டத்தில் மழை பொழியும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர்.

நிவாரி மாவட்டம் கடந்த ஆண்டு மழை இல்லாமல் வறட்சியை சந்தித்தது. இதனால், இப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் செல்லப் பிராணிகளுக்கு திருமணம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில், கொலு, ராஷ்மி என்ற நான்கு வயது நாய்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ள படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு!
திருமணத்துக்கு ஸ்பீக்கர் வைக்கப்பட்டு கிராமப்புற பாடல்கள் ஒலித்தன. அதற்கு கிராமவாசிகள் மகிழ்ச்சியுடன் ஆட்டம்போட்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கு விருந்து வைக்கப்பட்டது. அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் நாய்க்கு திருமணம் செய்துவைப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி