ஆப்நகரம்

ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு - மருத்துவ கவுன்சில் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இந்திய மருத்துவ கவுன்சில் வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Samayam Tamil 27 Jul 2020, 12:47 pm
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(OBC) 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம்.
Samayam Tamil Madras HC


ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

இன்று 5ஆம் ஆண்டு நினைவு தினம் - ஏவுகணை நாயகனுக்கு அப்படியென்ன சிறப்பு?

அதில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம். மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.

மக்களே உஷார், சென்னை, திருச்சி வரிசையில் விருதுநகர்!

மேலும் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், இந்திய மருத்துவ கவுன்சிலும் கலந்து ஆலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும். இதை மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி