ஆப்நகரம்

“நளினி சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது” : சென்னை உயர்நீதிமன்றம்

“நளினி சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது” : சென்னை உயர்நீதிமன்றம்

TNN 20 Sep 2016, 4:28 pm
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது சில நாட்களுக்கு நடிவடிக்கை எடுக்க வேண்டாம் என அமலாக்கத்துறையை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் மோசடி செய்த சாரதா நிதி நிறுவன வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை வழக்கறிஞர் நளினி சிதம்பத்திற்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு தடைவிதிக்கக்கோரி நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil madras high court asks ed not to take any action against nalini chidambaram
“நளினி சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது” : சென்னை உயர்நீதிமன்றம்


இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அரசுத்தரப்பு வழக்குரைஞரிடம் சில காலத்திற்கு அமலாக்கத்துறை நளினி சிதம்பரம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். சாரதா நிதி நிறுவன குழுமத்திடம் இருந்து 1 கோடி ரூபாய் பெற்றதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் நளினி சிதம்பத்தின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் சம்மன் சட்டத்திற்கு புறம்பானது என்றும், விதிகளின்படி ஒரு பெண் நேரில் ஆஜராக தேவையில்லை, காவல்துறை பெண்ணின் வீட்டிற்கு வந்து விசாரிக்க வேண்டும் என்றார்.

எனவே சம்மனுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சம்மன் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார். நளினி சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் முழு ஒத்துழைப்புடன் நடந்து கொண்டார் என்றும், ஆவணங்கள் அனைத்தையும் சரிவர கொடுத்தார் என்றும் அவரது தரப்பில் கூறப்படுகிறது. அதனால் தற்போது நான்காவது சம்மனுக்கு தடைவிதிக்க மனு கொடுத்துள்ளார். இது தொடர்பான வாதம் நிறைவு பெற்ற பிறகு நீதிபதி சிவஞானம் அரசு தரப்பு வழக்குரைஞரை கேட்டுக்கொண்டதோடு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி