ஆப்நகரம்

இமயமலை சிகரத்தில் ஏறி சாதித்த மதுரை பள்ளி மாணவர்கள்

மதுரையை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் இமயமலையில் உள்ள 22,500 அடி உயரமுள்ள கேதர்காந்தர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

TNN 27 Mar 2017, 5:21 pm
மதுரையை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் இமயமலையில் உள்ள 22,500 அடி உயரமுள்ள கேதர்காந்தர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
Samayam Tamil madurai school students climbs mount kedarkantha
இமயமலை சிகரத்தில் ஏறி சாதித்த மதுரை பள்ளி மாணவர்கள்


இமயமலை போன்ற பெரிய மலைகளில் ஏறும் மலை ஏறும் வீரர்கள், இமயமலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை விட சற்று குறைந்த உயரம் கொண்ட மலை சிகரங்களில் ஏறி பயிற்சி பெறுவது வழக்கம்.

இந்த வகையில் மதுரையை சேர்ந்த டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் படிக்கும் செளரிஷ், மகாத்மா பள்ளியை சேர்ந்த +1 படிக்கும் மிரல், விகாஷா பள்ளியில் படிக்கும் 10வகுப்பு படிக்கும் மாணவி ரத்திகா ஆகியோர் கேதர்காந்தர் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.



இதுகுறித்து மாணவர் சௌரிஷ் கூறியதாவது: இந்த மலையேற்றத்தை மறக்கவே முடியாது. எப்போது தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் எங்களை போன்ற மாணவர்களுக்கு இது மிக புதிய அனுபவமாக தான் இருக்கும். மலையில் ஏறுவதில் கொடூரமான குளிர், பனிப்பொழிவு சிரமத்தை ஏற்படுத்தியது. அதோடு மேலே ஏற ஏற ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும் என்பதால் முச்சுதிர்ணறியது.



மலை ஏறும் போது அந்த பனிமெத்தையில் இரண்டு நாட்கள் டெண்ட் போட்டு தங்கியிருந்தாம். அதோடு மலையேற்றத்தில் அனுபவம் வாந்த பலர் எங்களுடன் வந்திருந்ததால் எங்களால் மலை ஏற முடிந்தது.

அடுத்த செய்தி