ஆப்நகரம்

ரூ.34,000 கோடி கடன் தள்ளுபடி; விவசாயிகளை கொண்டாடும் மகாராஷ்டிரா அரசு...!

ரூ.34,000 கோடி கடன் தள்ளுபடி செய்து, மகாராஷ்டிர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

TNN 24 Jun 2017, 5:36 pm
மும்பை: ரூ.34,000 கோடி கடன் தள்ளுபடி செய்து, மகாராஷ்டிர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil maharashtra announces rs 34000 crore farm loan waiver
ரூ.34,000 கோடி கடன் தள்ளுபடி; விவசாயிகளை கொண்டாடும் மகாராஷ்டிரா அரசு...!


மகாராஷ்டிர மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்கு தலைமையேற்று நடத்திய முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, விவசாயிகள் பெற்றுள்ள கடனில் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறினார். மேலும் மாதந்தோறும் முறையாக கடன் தொகை செலுத்தி வருபவர்களுக்கு, 25% கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், விவசாயக் கடனை செய்ய மாநில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குமாறு வலியுறுத்தினார்.

கடன் தள்ளுபடி மூலம் கூடுதல் சுமை ஏற்படும் என்பதால், அதனை தங்கள் செலவினத்தை குறைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். ஒட்டுமொத்தமாக ரூ.34,000 கோடி அளவிற்கு விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி நடவடிக்கை, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Maharashtra announces Rs 34,000 crore farm loan waiver.

அடுத்த செய்தி