ஆப்நகரம்

பீமா கோரிகான் கலவரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைப்பு!

நாட்டையே உலுக்கிய பீமா கோரிகான் கலவரம் தொடர்பாக இரண்டு பேர் கொண்ட விசாரணைக்குழுவை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது.

Samayam Tamil 10 Feb 2018, 7:42 pm
நாட்டையே உலுக்கிய பீமா கோரிகான் கலவரம் தொடர்பாக இரண்டு பேர் கொண்ட விசாரணைக்குழுவை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது.
Samayam Tamil maharashtra government appointing a inquiry commission for bhima koregaon attack
பீமா கோரிகான் கலவரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைப்பு!


கடந்த ஜனவரி 1ஆம் தேதி, பீமா கோரேகான் போரின் வெற்றியைக் கொண்டாட ஏராளமான தலித் மக்கள் பீமா கோரேகான் இடத்தில் குவிந்தனர். அப்போது இந்துத்துவா அமைப்புகள் நடத்திய தாக்குதலில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது.

தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து மும்பை முழுவதும் பல இடங்களில் மாபெரும் முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றன. இதில் இருப்பிரிவினரிடையே விரோதம் ஏற்படும் வகையில் பேசியதாக குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் மீது புனே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், நாட்டையே உலுக்கிய பீமா கோரிகான் கலவரம் குறித்து விசாரிக்க இரண்டு பேர் அடங்கிய விசாரணைக்குழுவை மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது. மேலும் . இந்த குழு 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி