ஆப்நகரம்

ஆரே வழக்கு: மகாராஷ்டிர முதல்வர் அதிரடி உத்தரவு!

மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 Oct 2020, 5:04 pm
மும்பையின் ஆரே வனப்பகுதிக்கு அருகில் மெட்ரோ ரயில்களுக்கான பணிமனைகள் அமைக்க அப்பகுதியில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட வேண்டி நிலை ஏற்பட்டது. இதற்கான அனுமதியை மும்பை மாநகராட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அளித்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், மரங்களை வெட்ட தடை விதிக்க முடியாது என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டன.
Samayam Tamil போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்


இதையடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. இது தொடர்பாக மாணவர்கள் சிலர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், தாமாக முன்வந்து அவசர வழக்காக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆரே பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்தது.

முன்னதாக, ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்ட ஆதரவளித்த அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என ஏராளமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

ஒரு பார்சல் பிரியாணிக்கா இந்த கூட்டம்..? டாஸ்மாக்கை மிஞ்சிய வரிசை...

இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சி அமைந்துள்ளது. ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்ட ஆதரவளித்த பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அம்மாநில முதல்வராக உள்ளார்.

இந்த நிலையில், ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், ஆரே பகுதியில் அமையவிருந்த பணிமனை கஞ்சூர் மர்க் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி