ஆப்நகரம்

பேருந்து பயணம் இனி இப்படித்தான்; அரசின் முடிவால் அதிர்ந்து போன பயணிகள்!

அரசு பேருந்துகளில் பயணிப்பது தொடர்பாக மாநில அரசின் அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 18 Sep 2020, 10:38 am
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் அதிகளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பைக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 11,45,840 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். நேற்று ஒரேநாளில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாநில அரசு எடுத்துள்ள முடிவு பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் போதிய சரீர இடைவெளி, முகக்கவசங்கள் உடன் 50 சதவீத இருக்கைகள் மட்டும் நிரம்பும் வகையில் மக்கள் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 100 சதவீத இருக்கைகள் நிரம்பும் வகையில் பயணிக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுபற்றி போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சேகர் சன்னா கூறுகையில், அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் வாயிலாக அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Samayam Tamil Mumbai Bus Service


ஆனால் முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் பேருந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் இதற்கு வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில அரசு எடுத்துள்ள விபரீத முடிவு இது என்று குற்றம்சாட்டியுள்ளனர். ஏனெனில் மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

மும்பை -யில் தற்போது 3,500 பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவை இரண்டு இருக்கைகள் கொண்ட வரிசையில் ஒருவர் மட்டும் அமரும் வகையில் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அரசுப் பேருந்துகள் முழுவதும் நிரம்பி வழியும் வகையில் மக்கள் பயணித்தால் அது நோய்த்தொற்று பரவுவதற்கு எளிதில் வகுத்துவிடும்.

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி; இனிமே டிக்கெட் விலை தாறுமாறு? அதுவும் இங்கெல்லாம்!

பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும் என்று கூறுகின்றனர். ஆனால் மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவதால் அரசு போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு நாளொன்றுக்கு 5 லட்சம் பேர் வரை பயணிக்கத் தொடங்கினர்.

எனவே 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க மாநில அரசிடம் அனுமதி கேட்டோம். தற்போது அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வரவுள்ளது. இதன்மூலம் மாதத்திற்கு ரூ.100 கோடி வருமானம் ஈட்டப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே குஜராத், கர்நாடக மாநிலங்கள் முழு அளவிலான பயணிகளுடன் பேருந்துகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி