ஆப்நகரம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மாநில அரசு உத்தரவு!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 7:46 pm
கொரோனா தொற்றை மனதில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடு விதித்து வருகின்றன. அவ்வகையில், நாளை (டிசம்பர் 31) இரவு 11 மணி வரை ஹோட்டல்கள், உணவகங்கள், பப் மற்றும் பார்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Representational image


திறக்கப்பட்ட சபரிமலை நடை மூடப்படுமா? ஐய்யப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் வெளியே சென்று மருந்து வாங்குவது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு தடை இல்லை.

நாளை இரவு 11 மணி வரையில் ஹோட்டல்கள், உணவகங்கள், பப் மற்றும் பார்கள் திறந்திருக்கும். மக்கள் அனைவரும் கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வழக்கமாக ஒவ்வொரு புத்தாண்டுக்கும் மலைப் பகுதிகளில் ஏராளமானோர் கூடுவார்கள். இந்த புத்தாண்டுக்கு மலைப் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேனிலவில் நண்பனுடன் உறவு கொள்ள நடிகையை கட்டாயப்படுத்திய கணவர்
இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய புதிய கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. இதை தடுப்பதற்காக மகாராஷ்டிராவில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி