ஆப்நகரம்

மின்சாரம், தண்ணீர், கேஸ் எல்லாத்தையும் கட் பண்ணுங்க; அதிரவைக்கும் மாநில அரசு!

அரசு இல்லங்களில் அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் நிறுத்த மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 11:14 am
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்குவதற்கு அரசு இல்லங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்கான வாடகை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த வாடகை என்பதால் அரசு ஊழியர்கள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த சூழலில் பணியிடமாற்றம், ஓய்வு, பணி நீக்கம் ஆகியவற்றிற்கு ஆளான அரசு ஊழியர்கள் தங்கள் இல்லங்களை காலி செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.
Samayam Tamil govt quarters issue in maharashtra


இதனால் கோபமடைந்த மகாராஷ்டிர மாநில அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், அரசு ஊழியர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற, பணியிடமாற்றம் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் அரசு இல்லங்களை காலி செய்துவிட வேண்டும். இல்லையெனில் தண்ணீர், மின்சாரம், பைப் மூலம் விநியோகம் செய்யப்படும் கேஸ் ஆகியவை ரத்து செய்யப்படும்.

அடுத்த 2 நாட்கள் இங்கெல்லாம் செம ஷாக்; மஞ்சள் அலர்ட் விடுத்த மாநில அரசு!
மேலும் ஒரு சதுர அடிக்கு ஒரு மாதத்திற்கு 150 ரூபாய் என அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 30க்கும் மேற்பட்ட முக்கிய அரசு இல்லங்களில் போர்டு உறுப்பினர்களும், ஆணைய உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு அரசு இல்லங்கள் பொதுவாக ஒதுக்கப்படுவதில்லை.

இவ்வாறு முறைகேடான ஆக்கிரமிப்பால் அரசுப் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் நரிமன் பாயிண்ட் -ல் உள்ள யஷோதன், மரைன் லைன்ஸின் பாம்பே ஹாஸ்பிடல் அருகேவுள்ள பெல்லி ஹேவன், மலபார் ஹில்லில் உள்ள ஆம்பர் - அவந்தியில் உள்ளிட்ட முக்கிய அரசு இல்லங்களில் சில தகுதியற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கியிருக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் இணைந்த பாக்யராஜ்!
இவர்களின் விவரங்களை முதல்வரிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இந்த விஷயத்தில் முதலவர் சில கடினமான முடிவுகளை எடுப்பதே சரியாக இருக்கும் என்கின்றனர்.

அடுத்த செய்தி