ஆப்நகரம்

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு; மகாராஷ்டிர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மும்பை: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 30 Nov 2018, 12:18 pm
மகாராஷ்டிர மாநிலத்தில் 30% பேர் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் அரசு செய்வதில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil Maratha


தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனர். ஆனால் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு இல்லை.

ஆகையால் கல்வி, வேலைவாய்ப்பில் முன்வர இயலவில்லை என்று மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநில அரசு உறுதியளித்தது.

அதற்கான தீர்மானம் மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நிறைவேறியது. இந்த மாநிலத்தில் ஏற்கனவே 52% இடஒதுக்கீடு உள்ளது. தற்போது மராத்தா சமூகத்தினருக்கான 18% இட ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்தம் 68% இட ஒதுக்கீடாக மாறியுள்ளது.

ஆனால் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட இடஒதுக்கீடு 50% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி