ஆப்நகரம்

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Sep 2018, 3:30 am
ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil shutterstock_571650577
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வாலிபருக்கு கத்தி குத்து


மஹாராஷ்டிராவின் புனே நகரில் 46 வயதுடைய நபருக்கும், 23 வயதான வாலிபருக்கும் கடந்த 2 வருடங்களாக ஓரினச்சேர்க்கை உறவு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்றைக்கு முந்திய இரவில், வாலிபரும் அந்த நபரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அடுத்த நாள் காலையில் வாலிபரை ஓரினச்சேர்க்கைக்கு அந்த நபர் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு வாலிபர் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரம் அடைந்த நபர் இளைஞரை கத்தியால் குத்தி தாக்குதல் செய்துள்ளார். பிறகு ரத்த வெள்ளத்தில் அந்த வாலிபர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார்,

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த காவலர்கள் கத்தி தாக்குதல் சம்பவம் குறித்து குழு விபரங்களை சேகரித்தனர்.

அதை தொடர்ந்து வாலிபரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில் தொடர்புடைய இளைஞர் மற்றும் நபரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி