ஆப்நகரம்

ரூ.1-க்கு விற்பனையாகும் கிலோ வெங்காயம்- 2 விவசாயிகள் தற்கொலை..?

வெங்காய விலை வீழ்ச்சியால் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Samayam Tamil 10 Dec 2018, 9:06 pm
வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் மஹாராஷ்டிராவை சேர்ந்த இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Samayam Tamil வெங்காய விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தற்கொலை


நாட்டில் அதிகளவில் வெங்காயம் பயிரிடப்படும் மாநிலமாக மஹாராஷ்டிரா இருந்து வருகிறது. நாட்டில் விளைவிக்கப்படும் 50 சதவீத வெங்காயம் நாசிக் மாவட்டத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஒரு கிலோ வெங்காயத்தை விலை ரூ. 1-க்கு விற்பனையாகிறது. இது வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளிடம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் மனமுடைந்த நாசிக் சேர்ந்த விவசாயிகள் இருவர் தற்கொலை செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக போலீசார் அளித்த தகவலில், தத்யபா ஹைனார் மற்றும் மனோஜ் ஹோண்டேஜ் இருவரும் வெங்காய விலை வீழ்ச்சியால் தற்கொலை செய்துவிட்டதாக கூறுகின்றனர்.

நாசிக் விவசாயிகள் திடீர் தற்கொலை பலரையும் கவலையடையச் செய்துள்ளது. இதனால் வெங்காய விலையை உயர்த்தி தங்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி