ஆப்நகரம்

இனி எல்லாரும் 2 மாஸ்க் போடணுமாம்.. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் திருப்பம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பதிலாக மக்களை இரண்டு மாஸ்க் அணிந்துகொள்ள ஊக்குவிக்கும்படி மகாராஷ்டிர அரசின் மூத்த சுகாதார வல்லுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 20 Feb 2021, 10:36 pm
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடும் கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது.
Samayam Tamil Mask


இதுமட்டுமல்லாமல், இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பை புறநகர் ரயில்களில் மாஸ்க் போடாமல் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படையே அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. ஒரே அறிவிப்பில் பல்டி அடித்த அரசு!
இந்நிலையில், ஊரடங்கு விதிப்பது கடுமையான நடவடிக்கை எனவும், ஊரடங்கால் கொரோனாவை லேசாக மட்டுமே கடுப்படுத்த முடியும் என மகாராஷ்டிர அரசின் கோவிட்-19 சிறப்புப் படையின் சீனியர் உறுப்பினர் டாக்டர் ஷாஷங் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் இரண்டு மாஸ்க் அணிய வேண்டுமெனவும், நுண் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

செம ஸ்பீட் கொரோனா தடுப்பூசி; உலகையே ஆச்சரியப்பட வைத்த இந்தியா!
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஷாஷங் ஜோஷி, “ஊரடங்கு விதிப்பது கடுமையான நடவடிக்கை. ஊரடங்கு விதிப்பது எளிது. ஆனால் ஊரடங்கால் கொரோனா பரவல் குறையுமென உத்தரவாதம் இல்லை. இரவு ஊரடங்குகளை விதிப்பதில் எந்த பயனும் இல்லை.

இரண்டு மாஸ்க் அணிவதை ஊக்குவித்து, தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, தனிநபர் சுகாதாரத்தை கடைப்பிடித்து, நுண் கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைப்பதே சரியான நடவடிக்கைகள்” என்று கூறினார்.

அடுத்த செய்தி