ஆப்நகரம்

கேரளாவுக்கு ரூ.1.21 லட்சம் வழங்கும் பாலியல் தொழிலாளர்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ரூ.1.21 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளனர்.

Samayam Tamil 21 Aug 2018, 11:06 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ரூ.1.21 லட்சம் நிதியுதவி வழங்க உள்ளனர்.
Samayam Tamil kerala_floods_-_kochi


கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளிக்கும் அம்மாநிலத்துக்கு பல தரப்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் இணைந்து ரூ.21,000 நிதியை கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இத்துடன் நில்லாமல் இந்த மாத இறுதிக்குள் ரூ.1 லட்சம் தொகையைத் திரட்டி வழங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே அவர்கள் பல்வேறு மாநிலங்களில் நேர்ந்த பேரிடர்களுக்கு நிவாரணத் தொகையைத் திரட்டி அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி