ஆப்நகரம்

மத்திய அரசு அழுத்தம்.. பிரபலங்கள் ட்வீட் குறித்து விசாரணைக்கு உத்தரவு!

விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசு அழுத்ததால் பிரபலங்கள் ட்வீட் பதிவிட்டார்களா என விசாரிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 8 Feb 2021, 5:55 pm
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த சில மாதங்களாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி ரியானா, நடிகை மியா காலிபா, மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் ட்வீட் செய்திருந்தனர்.
Samayam Tamil Celebrities


விவசாயிகளுக்கு நன்மை நடைபெற நடவடிக்கை: மோடி பேச்சு!
இதையடுத்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க தேவையில்லை என சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, அணில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், கங்கனா ராணவத், அக்‌ஷய் குமார் போன்ற திரைப்பிரபலங்களும் ட்வீட் செய்திருந்தனர்.

இதில், போராடும் விவசாயிகள் அனைவரும் தீவிரவாதிகள் என நடிகை கங்கனா ராணவத் தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பினரிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவாக பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா.. மிரண்டு போன அதிகாரிகள்.. அதிர்ச்சியில் பெற்றோர்!
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக், “சில பிரபலங்கள் ட்வீட் செய்த விவகாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படும். ட்வீட்கள் பதிவான நேரம், ஒருங்கிணைந்த பாணி ஆகியவற்றை வைத்து பார்த்தால் இதெல்லாம் திட்டமிட்டது போல் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு கொடுத்த அழுத்தத்தின் விளைவாக பிரபலங்கள் பலர் ட்வீட் செய்ததாக மகாராஷ்டிர காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி