ஆப்நகரம்

மகாராஷ்டிரா கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு

பலி எண்ணிக்கை தற்போது 2ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணி இன்னும் தொடர்வதால், பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ​​​எழுந்துள்ளது.

Samayam Tamil 25 Aug 2020, 7:50 am
மகாராஷ்டிரா ராய்காட் மாவட்டத்தில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுண்ட சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்பதே இப்போது வரையிலும் தெரியவில்லை.
Samayam Tamil maha building collapse


மகாராஷ்டிர மாநிலம் ரைகாட் மாவட்டத்தில் உள்ள மஹாட் சிட்டி பகுதியில் இருந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நேற்று மாலை (24.08.2020) 6 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் ஏராளமான அமக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

முதற்கட்டமாக , இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 பேர் மீட்கப்பட்டனர். அப்போது இடிபாடுகளில் மேலும் 65 பேர் வரை சிக்கிக் கொண்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்த கட்டிடம் 5 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. 10 வருடத்திற்கு முன் கட்டி எழுப்பப்பட்டது எனக் கூறப்படுகிறது. மொத்தம் 40 வீடுகள் வரை உள்ளதாகக் கூறப்படுகிறது. இரவு முழுக்க தொடர்ந்த மீட்புப்பணியின் விளைவாக ஏறக்குறைய 60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். இன்னும் 18 பேரைத் தேடும்



இந்நிலையில், பலி எண்ணிக்கையும் 2ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணி இன்னும் தொடர்வதால், பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி