ஆப்நகரம்

ஓடும் ரயிலில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த தாய்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 30 வயது பெண் ஒருவா் மும்பை – விசாகபட்டினம் இடையே ஓடும் ரயிலில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளாா்.

Samayam Tamil 16 Jul 2018, 4:41 am
மகாராஷ்டிரா மாநிலத்தில் 30 வயது பெண் ஒருவா் மும்பை – விசாகபட்டினம் இடையே ஓடும் ரயிலில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளாா்.
Samayam Tamil Maharashtra Women


மகாராஷ்டிரா மாநிலம் கட்கோபாா் பகுதியைச் சோ்ந்தவா் சாயிக் தபாசும்(30). இவா் மும்பையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு விரைவு ரயிலில் சென்றுள்ளாா். நிறை மாத கா்ப்பிணியாக இருந்த அப்பெண்ணிற்கு ஞாயிற்றுக் கிழமை காலை திடீரென பிரசவ வழி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மருத்துவ குழுவிற்கு உடனடியாக தகவல் தொிவிக்கப்பட்டது. அதன்படி மும்பை ரயில் முனையத்திற்கு 50 கி.மீ. முன்னதாக கல்யாண் ரயில் நிலையம் அரகில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயிலில் ஏறிய மருத்துவ குழுவினா் பெண்ணிற்கு ரயிலிலேயே பிரசவம் பாா்க்கத் தொடங்கினா்.

இறுதியாக அப்பெண்ணிற்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. மேல் சிகிச்சைக்காக தாயும், குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேரும் நலமுடன் இருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி