ஆப்நகரம்

மகாத்மா காந்தி வன்முறையை ஆதரித்தார்: ஜேஎன்யு பேராசிரியர்

மகாத்மா காந்தி அரபிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஆதரவாக இருந்தார் என்று ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ஆர்.குமாரசுவாமி தன் புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

TNN 20 Oct 2017, 6:57 pm
மகாத்மா காந்தி அரபிய பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைக்கு ஆதரவாக இருந்தார் என்று ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ஆர்.குமாரசுவாமி தன் புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil mahatma gandhi was accommodative of arab violence claims book
மகாத்மா காந்தி வன்முறையை ஆதரித்தார்: ஜேஎன்யு பேராசிரியர்


ஜே.என்.யு. பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ஆர்.குமாரசுவாமி “Squaring the Circle: Mahatma Gandhi and the Jewish National Home” என்ற நூலை எழுதியுள்ளார். இதில், இஸ்ரேல் குறித்த மகாத்மா காந்தியின் எழுத்துக்களை அவரது செயலாளர் பியாரேலால் வெளியிடவில்லை என்றும் யூதாயிஸம் பற்றிய காந்தியின் புரிதல் குறைவானதே என்றும் குமாரசுவாமி விமர்சித்துள்ளார்.

பாலஸ்தீனம் மீதான அரபிய உரிமைக்காகக் காந்தி பேசியுள்ளதைக் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் குமாரசுவாமி, “ஹிட்லருக்கு எதிராகக்கூட அகிம்சையை வலியுறுத்திய காந்தி பாலஸ்தீனத்தில் அரபிய வன்முறைக்கு ஆதரவாக இருந்தார். அஹிம்சை மீதான அவரது பிடிப்பு ஐயத்திற்குரியது” என்றும் எழுதியுள்ளார்.

இக்கருத்துகளுக்கு ‘ஜாமியா மிலியா இஸ்லாமியா இந்தியா’ அரபுக் கலாச்சார மையத்தின் இயக்குநர் டாக்டர் ஸிக்ருர் ரஹ்மான் மறுப்பு தெரிவித்துள்ளார். பேராசிரியர் குமாரசுவாமி மகாத்மா காந்தியின் போதனைகளை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி