ஆப்நகரம்

“அமித்ஷாவின் பேச்சை கேட்டிருந்தால் காந்தி சிரித்திருப்பார்” : பதிலடி கொடுத்த காந்தி பேரன்!

காந்தியை விமர்சனம் செய்து பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பேச்சை கேட்டால் மகாத்மா காந்தியே சிரித்துவிடுவார் என காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 11 Jun 2017, 4:25 pm
காந்தியை விமர்சனம் செய்து பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பேச்சை கேட்டால் மகாத்மா காந்தியே சிரித்துவிடுவார் என காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil mahatma gandhis grandson gopala krishna gandhis answer to amit shah
“அமித்ஷாவின் பேச்சை கேட்டிருந்தால் காந்தி சிரித்திருப்பார்” : பதிலடி கொடுத்த காந்தி பேரன்!


சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மகாத்மா காந்தியை புத்திசாலி வணிகர் என்று விமர்சனம் செய்து பேசினார். குறிப்பிட்ட சாதியின் பெயரை குறிப்பிட்டு காந்தியை அமித்ஷா விமர்சனம் செய்து பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசப்பிதாவை கூட பாஜக சாதிய கண்ணோடு பார்க்கிறது. இதிலிருந்து பாஜகவின் சித்தாந்தம் தெரிகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காந்திஜியின் குறித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காந்தியின் விமர்சனம் குறித்து அவரது பேரன் கோபால கிருஷ்ண காந்தி தக்க பதிலடி கொடுத்துள்ளார். எனது தாத்தா காந்தி அவர் குறித்து பத்திரிகையில் வரும் கேலி சித்திரங்களை கண்டு சிரிப்பார். அது போல அமித்ஷா பேசியதை கேட்டிருந்தால் அந்த பேச்சில் சுவை இல்லா தன்மையை நினைத்து சிரித்திருப்பார் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி