ஆப்நகரம்

என்னே ஒரு திறமை; குழந்தைக்கு இப்போதே வேலைவாய்ப்பை உறுதிசெய்த மகிந்திரா தலைவர்!

மகிந்திரா நிறுவனத் தலைவர் ஒரு குழந்தைக்கு இப்போதே வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

Samayam Tamil 12 Aug 2018, 2:48 pm
புதுடெல்லி: மகிந்திரா நிறுவனத் தலைவர் ஒரு குழந்தைக்கு இப்போதே வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
Samayam Tamil Mahindra.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா. இவர் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் தனது டுவிட்டரில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அதில் சிறு குழந்தை ஒன்று, கட்டிலில் அமர்ந்துள்ளது. அது கீழே இறங்கப் பார்க்கையில் தரை தூரமாக இருக்கிறது. இதையடுத்து கட்டிலில் இருந்த தலையணைகளை ஒவ்வொன்றாக கீழே போடுகிறது.

பின்னர் அந்த தலையணைகள் மூலம் கீழே இறங்குகிறது. அந்த குழந்தையின் புத்திசாலித்தனத்தை சமூக வலைத்தளங்களில் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆனந்த் மகிந்திரா, இந்த குழந்தை தனது கல்லூரி படிப்பை முடித்த பின், வேலை வழங்கும் ஒப்பந்தத்தை அளிக்கத் தயார். எங்கள் திட்டங்கள் அனைத்தையும் நிச்சயம் சிறப்பாக முடித்துக் காட்டுவான். என்னவொரு குழந்தை அறிவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.

Mahindra executive chairman Anand Mahindra assures job for a small baby.

அடுத்த செய்தி