ஆப்நகரம்

முதல்வர் மாவட்டத்திலேயே இவ்ளோ தற்கொலையா.?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 991 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.

TNN 30 Oct 2017, 1:25 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் 991 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil majority farmers committed suicide in maharashtra
முதல்வர் மாவட்டத்திலேயே இவ்ளோ தற்கொலையா.?


இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில், அதிகளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 4 மாதத்தில் 991 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக முதலமைச்சரின் சொந்த ஊரான நாக்பூர் மாவட்டத்தில், விதர்பா மண்டலத்தில் 455 விவசாயிகள் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்து உள்ளனர்.

இந்தாண்டு செப்டம்பர் வரை 2 ஆயிரத்து 150 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8% குறைவு என்றாலும், இது தொடர்கதையாகி வருவது இந்தியாவுக்கே அபத்தாகிவிடும் சூழலாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியிட்ட பிறகும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகம் தொடருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் நல ஆர்வலர் விஜய் கூறுகையில், “வறட்சி மற்றும் பருவம் தவறிய மழையால் வேளாண் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்ட்தாலும், இதேபோல வேளாண் விளை பொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை என்பதாலயும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Majority farmers committed suicide in Maharashtra.

அடுத்த செய்தி