ஆப்நகரம்

காஷ்மீரில் நடப்பது என்ன? தமிழகத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

காஷ்மீரில் நடப்பதென்ன என்பது பற்றி, தமிழகத்தில் சில மனித உரிமை ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 7 Jun 2017, 5:23 pm
காஷ்மீரில் நடப்பதென்ன என்பது பற்றி, தமிழகத்தில் சில மனித உரிமை ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil making a case for tense kashmir on tamil soil
காஷ்மீரில் நடப்பது என்ன? தமிழகத்தில் விழிப்புணர்வு பிரசாரம்


Working Peoples Trade Union Council மற்றும் அகில இந்திய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்த அமைப்புகளின் அலுவலகத்தில் பிரத்யேக விழிப்புணர்வு பிரசார கூட்டம் நாள்தோறும் நடத்தப்படுகிறது.

இதில், காஷ்மீர் மனித உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் பங்கேற்று, தங்களது கருத்துகளையும், காஷ்மீரில் நடக்கும் போராட்டம் பற்றியும் மக்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.

இதுகுறித்து, பிரசார கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், ‘’காஷ்மீரில் என்ன நடக்கிறது என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொருவரும் முரண்பாடான கருத்துகளை கொண்டுள்ளனர். அவர்களுக்குப் புரிய வைக்கும் வகையில், இந்த பிரசார கூட்டத்தை நடத்தி வருகிறோம். காஷ்மீரிகள் உரிமைக்குரல் யாரால் நசுக்கப்படுகிறது என்பது பற்றியும் விரிவாகப் பல கோணங்களில் மக்களுக்கு புரிய வைக்கவே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,’’ என்றார்.

The meeting was organised by the All India People's Federation (AIPF) and WPTUC to discuss the citizen report on 'why people are protesting in Kashmir'.

அடுத்த செய்தி