ஆப்நகரம்

ஆண் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை - சம்பளத்துடன் லீவு தராங்களாம்!

குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வசதியாக சம்பளத்துடன் விடுப்பு அளிக்கும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 7:02 pm
மனைவியை விட்டு பிரிந்த அல்லது மனைவி இல்லாத நிலையில் வாழும் ஆண்கள், திருமணம் செய்து கொள்ளாத ஆண்கள் தங்களது குழந்தைகளைக் கவனித்து கொள்ள சிறப்பு சலுகை ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனை குழந்தைகள் கவனிப்பு விடுப்பு (Child Care Leave) என்று அழைக்கின்றனர். இது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளை கவனித்து கொள்ளும் ஆண்களுக்கும் பொருந்தும். இதற்காக தங்கள் துறையின் தலைமை அலுவலகத்தில் முன்கூட்டியே விண்ணப்பித்து விடுப்பு எடுக்க வேண்டும்.
Samayam Tamil child care leave for male


இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வீட்டில் குழந்தைகளை கவனிக்க குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலை இருக்க வேண்டும். இந்த விடுப்பு எடுக்கும் ஆண் அரசு ஊழியர்களுக்கு முதல் 365 நாட்களில் முழு சம்பளம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு 80 சதவீத சம்பளம் மட்டும் வழங்கப்படும். மேலும் இந்த விடுப்பில் இருக்கும் போது LTC எனப்படும் பயண விடுப்பு சலுகையும் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் மோடியின் 6 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர் நலன் கருதி பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

பண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்!

அவற்றில் ஒன்று குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆண் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது ஆகும். இந்த முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் போதிய வரவேற்பு கிடைக்காததால் தள்ளி போடப்பட்டு வந்தது.

இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசு ஊழியர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் தங்களது அதிகபட்ச திறனைப் பயன்படுத்தி பணி செய்ய வேண்டும். அதேசமயம் அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது ஊழலில் ஈடுபட்டாலோ அரசு சும்மா இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி