ஆப்நகரம்

வங்கி மீது மன்மோகன் சிங் அவதூறு வழக்கு

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்ததாக விவசாயி மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

TNN 11 Jun 2016, 2:04 pm
பிலிபிட்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்ததாக விவசாயி மன்மோகன் சிங்கின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக, பேங்க் ஆஃப் பரோடா வங்கி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil mallya guarantor to sue bank of baroda for defamation
வங்கி மீது மன்மோகன் சிங் அவதூறு வழக்கு


விஜய் மல்லையா வாங்கிய கடனுக்கு உத்தரவாத நபராக மன்மோகன் சிங் என்ற விவசாயியை சேர்த்து, அவரது சேமிப்பு மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட இரண்டு வங்கி கணக்கையும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி முடக்கியது.

விஜய் மல்லையா யாரென்றே தெரியாத அந்த விவசாயி மன்மோகன் சிங் இதனால் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வங்கியை அணுகிய போது தான் தவறுதலாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கி மீது அவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள விவசாயி மன்மோகன் சிங், தன் மீது அவதூறு விளைவித்தமைக்காக ரூ.10 லட்சமும், பயிர்க்கடன் மீது வங்கி விதித்த சில தடைகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.24,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

அடுத்த செய்தி