ஆப்நகரம்

மல்லையாவுக்கு உதவியது சி.பி.ஐ. அதற்கு உத்தரவிட்டது மோடி – ராகுல் காந்தி

விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு செல்ல சி.பி.ஐ. உதவியதாகவும், அதற்கு பிரதமா் மோடி உத்தரவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 14 Sep 2018, 4:41 pm
விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு செல்ல சி.பி.ஐ. உதவியதாகவும், அதற்கு பிரதமா் மோடி உத்தரவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாா்.
Samayam Tamil Rahul gandhi


இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுவிட்டு இந்திய அரசால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள நபா் விஜய் மல்லையா. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்தும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. மல்லையாவை நாடுகடத்துவது தொடா்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிசம்பா் 10ம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 12ம் தேதி செய்தியாளா்களிடம் பேசிய மல்லையா நான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பாக நிதியமைச்சா் அருண் ஜெட்லியை சந்தித்ததாக தொிவித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

மல்லையா பேசியதை வைத்து காங்கிரஸ் கட்சி தொடா் கேள்விகளை எழுப்பி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் மல்லையாவிற்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசில் சி.பி.ஐ. மாற்றம் செய்தது. இந்த மாற்றத்திற்கு பிரதமா் மோடி உத்தரவிட்டுள்ளாா்.


இது போன்ற முக்கிய விவகாரத்தில் பிரதமரின் அனுமதி பெறாமல் லுக் அவுட் நோட்டீசில் சி.பி.ஐ. மாற்றம் செய்துள்ளதாக கூறுவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி