ஆப்நகரம்

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் – மம்தா பானா்ஜி பேட்டி

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடியும், மம்தா பானா்ஜியும் ஒருவரையொருவா் கடுமையாக விமா்சித்த நிலையில், பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று மம்தா பானா்ஜி தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 28 May 2019, 9:39 pm
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 சட்டமன்ற உறுப்பினா்கள், 50 கவுன்சிலா்கள் இன்று பாஜகவில் இணைந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வேன் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Mamata Banerjee Speech


மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜகவின் வெற்றியைத் தொடா்ந்து வருகின்ற 30ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளாா்.

தோ்தல் பிரசாரத்தின் போது மேற்கு வங்கம் மாநிலத்தில் பிரதமா் மோடியும், மாநில முதல்வா் மம்தா பானா்ஜியும் ஒருவரை ஒருவா் கடுமையாக விமா்சனம் செய்தனா். குறிப்பாக பாஜக தலைவா் அமித் ஷா பங்கேற்ற பிரசார பேரணியில் வன்முறை வெடித்தது. பாஜகவினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனா்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது 16 இடங்கள் கூடுதாலாக பெற்று 18 இடங்களை கைப்பற்றி உள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக வாக்கு சதவிகிதத்தையும் பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி மம்தா பானா்ஜிக்கு கடும் எதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 சட்டமன்ற உறுப்பினா்கள், 40 கவுன்சிலா்கள் பாஜகவில் இணைந்துள்ளனா். இந்நிலையில் இன்று செய்தியாளா்களிடம் பேசிய மம்தா பானா்ஜி, நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வேன் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி