ஆப்நகரம்

எல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அதிரடி அறிவிப்பு!

தினக்கூலி தொழிலாளர்களின் கூலித் தொகை உயர்த்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2021, 10:24 pm

ஹைலைட்ஸ்:

  • கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு
  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
  • தேர்தல் நெருங்கும் சூழலில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil money
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை எப்படியேனும் ஆட்சியை பிடித்துவிட வேண்டுமென பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. மறுபுறம், ஆட்சியை தக்கவைக்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது.
இந்தியாவுக்குள் நுழைந்த ஏலியன்கள்? வெளியான அதிர்ச்சி வீடியோ!
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார் மம்தா பானர்ஜி. தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களின் பாணியில் ‘மா கிச்சன்’ என்ற உணவகத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் மம்தா. இதில் குறைந்த விலையில் ஏழை எளியோர்க்கு நிறைவான உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில அரசின் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினக்கூலி தொழிலாளிகளுக்கு கூலித் தொகையை உயர்த்துவதாக மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். கூலி உயர்வால் மொத்தம் 56,500 தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனவும் மம்தா பானர்ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடங்கியது நாடு தழுவிய வேலைநிறுத்தம்; முடங்கியது வர்த்தகம்!
மம்தாவின் ட்விட்டர் பதிவில், “நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படும். திறனற்ற தொழிலாளர்களுக்கு (unskilled labour) தினக்கூலி 144 ரூபாயில் இருந்து 202 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதி திறனுள்ள தொழிலாளர்களுக்கான (semi skilled labour) கூலி 172 ரூபாயில் இருந்து 303 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திறனுள்ள தொழிலாளர்களுக்கு (skilled labour) கூலி 404 ரூபாய்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி