ஆப்நகரம்

தேர்தல் தோல்வியால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: மம்தா பானர்ஜி ஆறுதல்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் தோற்றவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

TNN 11 Mar 2017, 7:48 pm
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் தோற்றவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mamata congratulates winners tells losers not to lose heart
தேர்தல் தோல்வியால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: மம்தா பானர்ஜி ஆறுதல்


உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகியவை தோல்வியடைந்துள்ளன.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ’’5 மாநில தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அதேசமயம், தோற்றவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். சுதந்திரமாகச் செயல்பட்ட வாக்காளர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் எனும்போது, வெற்றி, தோல்விகள் மாறிமாறி வரும். இதனால், தோற்றவர்கள் மக்களின் மீதான நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்,’’ என, மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

West Bengal Chief Minister Mamata Banerjee on Saturday congratulated winners in the assembly polls and advised the losers to not lose heart.

அடுத்த செய்தி