ஆப்நகரம்

வாஜ்பாயிடம் நலம் விசாரித்த மம்தா மற்றும் நிதிஷ்

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து பீகார் மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

Samayam Tamil 17 Jun 2018, 1:51 am
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறித்து பீகார் மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
Samayam Tamil 64616936


93 வயதான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்றுக்காக சிகிச்சை அளிகப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அவரைச் சந்திந்து நலம் விசாரித்தனர். பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அவரைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று அவரைச் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர். பின், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸும் வாஜ்பாயைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அடுத்த செய்தி