ஆப்நகரம்

பிரதமர் மோடி வங்கிக் கணக்கை சமர்பிக்க தயாரா?

எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களை கணக்கு கேட்பவர்கள் முதலில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தங்களது வங்கிக் கணக்குகளை சமர்பிக்க தயாரா என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி சவால் விடுத்துள்ளார்.

TOI Contributor 30 Nov 2016, 1:09 pm
லக்னோ: எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களை கணக்கு கேட்பவர்கள் முதலில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தங்களது வங்கிக் கணக்குகளை சமர்பிக்க தயாரா என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி சவால் விடுத்துள்ளார்.
Samayam Tamil mamata tells is modi and amit shah ready to reveal their bank accounts
பிரதமர் மோடி வங்கிக் கணக்கை சமர்பிக்க தயாரா?


கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால், மக்கள் புது ரூபாய்க்கும் சில்லரைக்கும், கல்லை கண்டால் நாயை காணம், நாயை கண்டால் கல்லை காணாம் என்பது போல படாதபாடு பட்டுக்கொண்டுள்ளனர். எனவே மத்திய அரசு தனது முடிவை பின்வாங்க வேண்டும் என நாடு முழுதுவதும் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியாக சேர்ந்து போராட்டம் நடத்தியது. இதில், லக்னோவில் சமாஜவாதி கட்சியோடு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பேரணி நடத்தியது.

இந்த பேரனியில் கலந்து கொண்ட மம்தா பேனர்ஜீ கூறுகையில்,‘
பிரதமர் மோடி இந்த விஷயத்தில் ஜெர்மனியின் ஹிட்லரையே மிஞ்சியுள்ளார். ரூ. 500, 1000 நோட்டு செல்லாது அதிரடி அறிவிப்பின் மூலம் ஏழை மக்களின் இந்திய அரசியல் சாசன உரிமைகளை பறித்து விட்டார். மக்களின் நலனுக்காக மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். பாஜக எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிடுமாறு கேட்கும் மோடி, முதலில் அவரிடமிருந்து இந்த நடவடிக்கையை துவங்காதது ஏன்? அவர்களை கேட்கும் முன் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தங்களின் வங்கிக்கணக்கை சமர்பிக்க முன்வருவார்களா?. இந்த அறிவிப்பதற்கு முன்பாக பா.ஜ.க.,வின் பெயரிலும், தலைவர் அமித் ஷா பெயரிலும் ஏகப்பட்ட சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. பிரதமர் மோடி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார். இது பத்தாது என்று மக்களிடம் உள்ள நிலங்கள், வீடுகளைப் பறிக்க மோடி அடுத்தாக தயாராகி விட்டார்.’ என்றார்.

அடுத்த செய்தி