கொல்கத்தா: தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை இன்று (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. ராம மோகன ராவ் அவர்களின் வீடு, அலுவலகம் உட்பட 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராம மோகன ராவ் மகனுக்குத் நெருக்கமான 5 தொழிலதிபர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது. வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகக் காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் பெயரிலேயே தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இப்போது, தமிழகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. நியாயமற்ற செயல். கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க வருமான வரித்துறை முயற்சிக்கிறாதா” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Earlier the Principal Secretary of @ArvindKejriwal was raided and harassed. Now i read Chief Secretary TN also raided 1/6 — Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2016
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை இன்று (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. ராம மோகன ராவ் அவர்களின் வீடு, அலுவலகம் உட்பட 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராம மோகன ராவ் மகனுக்குத் நெருக்கமான 5 தொழிலதிபர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது. வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகக் காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் பெயரிலேயே தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இப்போது, தமிழகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. நியாயமற்ற செயல். கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க வருமான வரித்துறை முயற்சிக்கிறாதா” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Earlier the Principal Secretary of @ArvindKejriwal was raided and harassed. Now i read Chief Secretary TN also raided 1/6 — Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2016