ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு பின் பாஜகவை பந்தாடும் மேற்கு வங்க முதல்வர்!

திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியினரை, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Mar 2018, 1:13 pm
திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியினரை, பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mamtha banerjee has condemned the acts of bjp cadres attacking communist party members in tripura
ஜெயலலிதாவுக்கு பின் பாஜகவை பந்தாடும் மேற்கு வங்க முதல்வர்!


பாஜக கட்சி திரிபுராவில் வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவினர் சிலர் திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலையை அகற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்திலும் ஜாதி வெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பதிவிட்டார். எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாஜக கட்சியினர் திரிபுரா வெற்றியைத் தொடர்ந்து கம்னியூஸ்ட் கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “திரிணாமுல் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே சித்தாந்த ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது. அதை நாங்கள் சித்தாந்த ரீதியாகவே தாக்குவோம். ஆனால், அக்கட்சியின் தொண்டர்களை தாக்கமாட்டோம்.

திரிபுராவில் வெற்றி பெற்ற பாஜக அங்குள்ள லெனின், மார்க்ஸ் ஆகியோரின் சிலைகளை உடைத்து, கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்து எந்தக் கட்சி குரல் கொடுக்கிறதோ இல்லையோ, நான் குரல் கொடுப்பேன்.

பாஜக தனது அடுத்த இலக்காக மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வருகிறது. அப்படி அவர்கள் மேற்கு வங்கத்தை குறிவைத்தால், நான் டெல்லி செங்கோட்டையை குறிவைப்பேன். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென எனக்கு ஆசையில்லை, மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது ஆசை,” என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

அடுத்த செய்தி