ஆப்நகரம்

பான் மசாலா கொடுக்க மறுத்த முதியவர் அடித்துக் கொலை

கடன் பாக்கி உள்ளதால் பான் மசாலா தர மறுத்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

Samayam Tamil 5 Oct 2018, 1:41 am
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பான் மசாலா தர மறுத்ததற்காக ஒரு கும்பல் அடித்துக்கொன்றுள்ளது.
Samayam Tamil img_1538663088819_739


உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தோய் பகுதியில் பான் மசாலா கடை நடத்தி வந்துள்ளார் ஒரு முதியவர். 60 வயதான இவரது கடையில் தினமும் பான் மசாலா வாங்கிவிட்டு காசு கொடுக்கமால் ஏமாற்றி வந்துள்ளார் ஒருவர்.

இந்நிலையில், பாக்கியை திருப்பிக் கொடுக்காமல் மீண்டும் பான் மசாலா பாக்கெட்டை கடன் கேட்டிருக்கிறார் அந்த நபர். இதற்கு அந்த முதியவர் பழைய கடன் பாக்கியைத் திரும்ப செலுத்திவிட்டு வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தன் கூட்டாளிகளுடன் வந்து முதியவரை அடித்தே கொன்றுள்ளனர். இது குறித்து முதியவரின் குடும்பத்தின் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.

அடுத்த செய்தி