ஆப்நகரம்

குறட்டை சத்ததில் மயங்கிய வாயில் நுழைந்த பாம்பு : கடித்து குதறிய இளைஞன்

குறட்டை விட்டு தூங்கிய இளைஞனின் வாயில் பாம்பு நுழைந்ததால், தூக்கத்தில் கடித்து துப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TOI Contributor 9 Sep 2016, 9:38 pm
இந்தூர் : குறட்டை விட்டு தூங்கிய இளைஞனின் வாயில் பாம்பு நுழைந்ததால், தூக்கத்தில் கடித்து துப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil man bites off snakes head after it slithers into mouth
குறட்டை சத்ததில் மயங்கிய வாயில் நுழைந்த பாம்பு : கடித்து குதறிய இளைஞன்


வினோத் ரகுவன்சி (28) பெரும்பாலும் வீட்டின் வெளியே படுக்கையை விரித்து குளிர்ந்த காற்றில் தூங்குவது வழக்கம். இது போன்று நேற்று இரவு தூங்கிய பொழுது பயங்கர நிகழ்வு நடந்துள்ளது. பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வினோத் நேற்று இரவு மிகவும் அசதியில் குரட்டை சத்தத்துடன் தூங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பாம்பு ஒன்று வினோதின் வாயில் செல்ல முயன்றுள்ளது. தூக்கத்தில் இருந்த வினோத தனது வாயில் பாம்பு செல்வதை அறியாமல் அதை கடித்துள்ளார். இதனால் பாம்பு தலை துண்டிக்கப்பட்டு அதன் உடல் தரையில் துடித்துக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த அவரின் தாய், வினோதின் முகத்தில் ரத்தம் வருவதை பார்த்தும், அவன் அருகில் பாம்பு ஒன்று தலையின்றி துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய் உள்ளார். வினோத்தை எழுப்பிய பின்பு தான் தெரியும் அவர் வாயில் பாம்பி தலை இருப்பது.
பதறிப்போன அவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வினோத்திற்கு விஷ முறிவு ஊசி போடப்பட்டு சோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதன்மூலம் கூகுளில் பாம்பை கடித்த மனிதர் என தேடினால் கிடைக்கும் முதல் மனிதர் என்ற அளவுக்கு தற்போது புகழ்பெற்றுள்ளார் வினோத். இதே போல் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கட்டுவிரியன் பாம்பை கடித்து கொன்றார். இருப்பினும் அவர் அடுத்த 12 மணி நேரத்தில் உயிரிழந்தார். நேபாளத்தில் நெல் வயலில் வேலை பார்த்த ஒரு நபர் தெரியாமல் நாகப் பாம்பை கடித்தார். அதனால் பம்பும் பதிலுக்கு அவரை தீண்டியது. இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் இன்று உயிருடன் இருக்கிறார். இந்த பட்டியலில் தற்போது வினோத் இணைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை மருத்துவர்களிடம் கூறியபொழுது அவர்களும் அதிர்ந்து போய் உள்ளனர். இதுகுறித்து போலீஸிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் ஆச்சர்யத்துடன் வினோத்தை வந்து பார்த்து சென்றனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் என பலரும் வினோத்தை நலம் விசாரித்து நடந்த சம்பவத்தை கேட்டு சென்றனர்.

அடுத்த செய்தி