ஆப்நகரம்

கோயிலுக்குள் நுழைந்து அதிகாரியை வெட்டிய இளைஞன்

முன் பகை காரணமாக பெண்ணை கோயிலில், வெட்டுக் கத்தியால் தாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டான்.

TNN 19 Oct 2016, 11:40 am
கோலார் : முன் பகை காரணமாக பெண்ணை கோயிலில், வெட்டுக் கத்தியால் தாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டான்.
Samayam Tamil man brutally attacks woman repeatedly with machete in temple in karnataka
கோயிலுக்குள் நுழைந்து அதிகாரியை வெட்டிய இளைஞன்


கர்நாடகா மாநிலம், கோலாரில் உள்ள கோடி லிங்கேஸ்வரி கோயில் அதிகாரியாக இருப்பவர் குமாரி. இவர் கடந்த ஞாயிறு கிழமை இரவு அலுவலகத்தில் பணியில் இருந்த பொழுது, அங்கு பெரிய வெட்டுக்கத்தியோடு வந்த இளைஞன் அவரை கடுமையாக தாக்கினார். அங்கிருந்த மற்றவர்கள் தடுக்க முயன்றும், குமாரியை விடாமல் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த தாக்குதாலில் குமாரியின் தலை மற்றும் கைகளில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தாக்குதல் நடத்திய அந்த நபர் 24 வயதான சந்தோஷ் என்றும், அவர் குமாரியின் பக்கத்துவீட்டில் வசிப்பவர் என்று தெரிய வந்தது. குடும்ப முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

அடுத்த செய்தி