ஆப்நகரம்

யம்மா என்னா அடி.! ஈவு இரக்கமின்றி தாக்கும் சிங்குகள்... பஞ்சாப் பக்கம் போயிரக்கூடாது..!

டெல்லியில் காரை சேதப்படுத்தியதாக தனிமையில் இருந்த கடை உரிமையாளரை சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Oct 2019, 8:36 pm
டெல்லி மாநகரம், பஞ்சாபி சாகு என்ற பகுதியில் எதிர்பாராதவாறு இரு கார்களும் லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு காரில் பஞ்சாபிகள் நான்கு பேர் வந்துள்ளனர். மற்றொரு காரில் அங்குள்ள ஒரு கடை உரிமையாளர் இருந்துள்ளார்.
Samayam Tamil 88888


இந்தியாவை சுற்றிக்காட்ட 70 வயது தாயுடன் 7 மாதம் பைக்கில் பயணித்த மகன்... மகேந்திரா நிறுவனமே நெகிழ்ச்சி.!

இந்நிலையில் காரை சேதப்படுத்தியதாக கூறி அந்த பஞ்சாபிகள் கடை உரிமையாளரை கடை வரைக்கும் துரத்தி வந்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோவில், கடை உரிமையாளர் ஓடி வருகிறார். அவரை வழி மரித்த பஞ்சாபி ஒருவர் எட்டி உதைத்து, முகம், தலை, கை என சரமாரியாக தாக்குகிறார்.


அதன்பிறகு மேலும் இரண்டு பேர் சேர்ந்து அவரை விடாமல் அடித்து உதைக்கின்றனர். பார்ப்பதற்கு மெல்லிய உடல் தோற்றத்தை கொண்ட அந்த கடை உரிமையாளரை, பயில்வான் பாணியில் உள்ள பஞ்சாபிகள் தூக்கி போட்டு பந்தாடுகிறார்கள்.

விக்ரம் லேண்டர் என்னவானது; இதுதான் நாசாவின் பதில்!!

இந்த காட்சி கடையிலிருந்து சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து பஞ்சாபி பாகு போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். மேலும் கடையிலிருந்து 15 லட்சம் ரூபாயை அவர்கள் திருடி சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி