ஆப்நகரம்

இறந்த மனைவியை 10கிமீ தோளில் சுமந்து சென்ற கணவர்!

மருத்துவமனையில் காசநோயினால் இறந்த தன் மனைவியை, மகளுடன் 10கிமீ அவரது கணவர் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

TOI Contributor 25 Aug 2016, 11:53 am
புவனேஷ்வர் : மருத்துவமனையில் காசநோயினால் இறந்த தன் மனைவியை, மகளுடன் 10கிமீ அவரது கணவர் தனது தோளில் சுமந்து சென்றுள்ளார். ஒடிஷாவின் ஏழ்மையான மாவட்டத்தில் வசிக்கும் தனா மாஜியின் மனைவி அமங் டே காச நோயினால் கடந்த செவ்வாய் இரவு உயிரிழந்துள்ளார். இறந்த மனைவியின் உடலை தனது சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வாகனம் ஏற்பாடு செய்யும்படி மருத்துவமனை அதிகாரிகளை கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் வாகனம் ஏற்பாடு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனையடுத்து தனது 12 வயது மகளுடன் இறந்த மனைவியின் விரைத்து போன உடலை போர்வையால் சுற்றி தன் தோளில் சுற்றி 10 கிமீ தூரத்திற்கு சுமந்து வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது இவரது கிராமம்.
Samayam Tamil man carries his wife after her death for 10km
இறந்த மனைவியை 10கிமீ தோளில் சுமந்து சென்ற கணவர்!


இதுபோன்று மருத்துவ உதவி இல்லாத மாநிலங்களில் இலவசமாக இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு “மகாபரயனா” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் கீழ் 37 அரசு மருத்துவமனைகளுக்கு வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது போன்ற இக்கட்டான சூழலில் அவருக்கு ஒரு வாகனமும் கிடைக்கவில்லை. தொலைக்காட்சி நிருபர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வாகனம் வரவழைக்கப்பட்டு மீதமுள்ள தூரத்தை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றார்.

ஒடிஷாவை ஆளும் பிஜூ ஜனதா தள் பாராளுமன்ற உறுப்பினர் கலிகேஷ் சிங் தியோ, தான் ஏற்கனவே மாநில அமைச்சரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். கலஹன்டி மாவட்ட ஆட்சியர், இந்த நிகழ்வு பற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துவிட்டோம் என்றும், அந்த பெண்ணின் இறுதி சடங்கிற்கு உதவ மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி