ஆப்நகரம்

இரவு உணவு சாப்பிட சென்றவர் ஹார்ட் அட்டாக்கில் மரணம் !

ஹைதரபாத் அருகே இரவு உணவு சாப்பிடச்சென்ற இடத்தில் திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். இதை தாங்கமுடியாத அவரது குடும்பத்தினரும் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 31 Jul 2016, 5:19 am
ஹைதராபாத்: ஹைதரபாத் அருகே இரவு உணவு சாப்பிடச்சென்ற இடத்தில் திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். இதை தாங்கமுடியாத அவரது குடும்பத்தினரும் ரயில்முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man dies at dinner table family jumps in front of train
இரவு உணவு சாப்பிட சென்றவர் ஹார்ட் அட்டாக்கில் மரணம் !


ஹைதராபாத்தி ல் இருந்து சுமார் 60 கி.மீ., தூரத்தில் உள்ள பான்கின் எனும் இடத்தில் சத்திய நாராயணன் என்பவர் தனது குடும்பத்துடன் இரவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வர, வலியால் துடித்துள்ளார். உடனே இவரது குடும்பத்தினர் இவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு முடிந்த அளவு வேகமாக அழைத்துச்சென்றுள்ளனர்.

இருப்பினுன் கொண்டு செல்லும் வழியிலேயே சத்திய நாராயணன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த இவரது மனைவி மீரா, 45. இரண்டு மகள்கள் சுவாதி, 31. நீலிமா 29. மகன் சிவராம கிருஷ்ணன் 23 ஆகியோர் காட்கேசர் எனும் இடத்தில் உள்ள ஆளில்லாத ரயில் பாதைக்கு சென்று ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தனர்.

அடுத்த செய்தி