ஆப்நகரம்

எனக்கு கொரோனாவா? அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த நபர் - மருத்துவர்கள் பயங்கர ஷாக்!

கொரோனா அறிகுறிகள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 5 Feb 2020, 8:45 am
38 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கனடாவில் இருந்து சீனா வழியாக இந்தியா வந்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் நகருக்கு சென்றுள்ளார். எங்கு பார்த்தாலும் கொரோனா வைரஸ் பீதி நிலவி வருவதால் தாமாக முன்வந்து கோட்காபுரா சிவில் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை பரிசோதனைக்கு சென்றார்.
Samayam Tamil Corona Punjab


மத்திய அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டுதலின்படி, அவரை குரு கோவிந்த் சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அங்கு சென்ற அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே தனி வார்டில் உரிய கண்காணிப்பில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனி வார்டில் எல்லாம் தன்னால் இருக்க முடியாது என்று பிடிவாதம் செய்துள்ளார்.

கொரோனா உஷார் - வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர தடை !

இந்த சூழலில் திடீரென மருத்துவமனையில் இருந்து அந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே மேலதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் நடந்தவற்றை போலீசாரை கூறி உடனடியாக அந்த நபரை அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஃபரித்கோட் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்கர் சிங், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரிடம் உரிய பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவழியாக சமாதானம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு வர சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தனை பேருக்கு கொரோனா அறிகுறியா?- டெல்லி ராணுவ மருத்துவமனையில் பதற்றம்!

இவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் ஒரு மிகப்பெரிய வைரஸ் குடும்பமாக விளங்குகிறது. இவை சாதாரண சளி முதல் சுவாசக் கோளாறுகள் வரை ஏற்படுத்தக் கூடியவை.

இவற்றில் ஒரு வைரஸ் தான் சீனாவில் ஏராளமானோரை உயிர் பலி வாங்கியுள்ளது. அந்நாட்டின் மத்திய ஹூபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தொடங்கி 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இந்தியாவில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி