ஆப்நகரம்

நண்பனின் 12 வயது மகனிடம் இயற்கைக்கு முரணான உறவில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை!

சிறுவனிடம் தவறான உறவில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 5 Feb 2019, 10:58 am
ஹரியானா மாநிலம் ஹிசார் நகரில் நிகழ்ந்த அதிர்ச்சிகர சம்பவத்திற்கு தண்டனை கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 29, 2017ல் ஹிசார் போலீசில் சிறுவன் ஒருவன் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதாவது தனது தந்தையின் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
Samayam Tamil Hisar incident


அங்கு அவரது அறையில் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த நண்பர் என்னிடம் இயற்கைக்கு முரணான வகையில் உறவில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து வெளியேறினேன். இதுகுறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன்.

அவரின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளேன். சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய தண்டனை விதிக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை மாவட்ட கூடுதல் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இயற்கைக்கு முரணான உறவில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி பங்கஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.5000 அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

அடுத்த செய்தி