ஆப்நகரம்

ஏ.டி.எம்மில் அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுத்தவருக்கு அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.

TNN 22 Mar 2017, 5:23 am
ஜாம்நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுத்தவருக்கு அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.
Samayam Tamil man gets six misprinted notes of rs 500 from atm
ஏ.டி.எம்மில் அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள்


குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் ரஞ்சித் சாலையில் உள்ள பரோடா வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த அல்டாப் சாகி என்பவருக்கு அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன. ரூ.10,000 பணம் எடுத்த அவருக்கு 6 நோட்டுகள் ஒழுங்காக அச்சாகாமல் கிடைத்தன.

ஒரு ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மட்டுமே அச்சாகியிருந்தது. மற்றொரு பக்கம் முழுவதும் அச்சிடப்படவில்லை. மேலும் 5 நோட்டுகளில் வரிசை எண், இந்தியில் எழுதப்பட்ட ரூபாய் நோட்டின் மதிப்பு ஆகியவை தெளிவாக அச்சாகவில்லை.

இதனால், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கி சென்றார் அல்டாப். வங்கி ஊழியர்கள் அவர் அளித்த ரூபாய் நோட்டுகளை சோதனை செய்து உண்மையான நோட்டுகள் தான் என்பதை உறுதிசெய்தனர். பின், மாற்று ரூபாய் நோட்டுகளை அல்டாப்க்கு வழங்கினர்.

ஒரு புறம் மட்டும் அச்சானவை, அரைகுறையாக அச்சானவை, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்குப் பதிலாக சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சானவை, வரிசை எண் அச்சாகாதவை, மகாத்மா காந்தியின் உருவப்படும் அச்சாகாதவை என தொடர்ந்து குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம். பணம் எடுப்பவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த தவறு தொடர்ந்து நேர்வதற்கான காரணம் குறித்து ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

அடுத்த செய்தி