ஆப்நகரம்

செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மீது காலணி வீச்சு

டெல்லி: பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரசிம்ம ராவ் மீது செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த நபர் திடீரென ஷூவை எடுத்து வீசினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 18 Apr 2019, 4:32 pm
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நரசிம்ம ராவ் மீது திடீரென காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காலணியை வீசிய நபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil டெல்லியில் பாஜக எம்.பி மீது ’ஷூ’ வீச்சு
டெல்லியில் பாஜக எம்.பி மீது ’ஷூ’ வீச்சு


ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ஜி.வி.எல். நரசிம்மராவ், பாஜக-வின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ஒரு நபர், திடீரென நரசிம்ம ராவ் மீது தனது காலில் இருந்த ஷூவை கழட்டி வீசினார். இதனால் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அரங்கில் இருந்த சிலர் உடனடியாக அந்த நபரை பிடித்து அழைத்துச் சென்றனர். அவர் யார்? எதற்காக இப்படி செய்தார் என்பது தொடர்பாக விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வரவழைக்கப்பட்டு, எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூவை வீசிய நபர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி