ஆப்நகரம்

செல்பி எடுக்கும் போது மனைவியை கொன்றவர் கைது

செல்பி எடுக்கும் போது மனைவியை ஆற்றுக்குள் தள்ளி கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TOI Contributor 1 Jun 2016, 2:32 pm
மீரட்: செல்பி எடுக்கும் போது மனைவியை ஆற்றுக்குள் தள்ளி கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man pushes wife into canal while clicking selfie
செல்பி எடுக்கும் போது மனைவியை கொன்றவர் கைது


உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அஃப்டாப் (30) என்பவர், தனது மனைவி ஆயிஷாவை (24) கங்கை ஆற்றின் முன் நின்று செல்பி எடுக்கலாம் என்று கூறியுள்ளார். அதனை நம்பி கணவரின் அருகில் வந்த ஆயிஷாவை செல்பி எடுக்கும் போது கங்கை ஆற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து ஆயிஷாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அஃப்டாபை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் மழுப்பலான பதில்களை அளித்து வந்த அஃப்டாப் அதன்பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

வரதட்சணை கேட்டு ஆயிஷாவை தொடர்ந்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும், அதன்காரணமாக இந்த கொலை பாதக செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் ஆயிஷா குடும்பத்தினர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது மனைவியை கொலை செய்த பின்னர், அதனை திசை திருப்பும் பொருட்டு எங்களிடம் சிலர் கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது, எனது மனைவியை அவர்கள் ஆற்றினுள் தள்ளி விட்டனர் என காவல் நிலையத்தில் அஃப்டாப் புகார் அளித்துள்ளார்.

தற்போது கங்கை ஆற்றினுள் இருந்து ஆயிஷாவின் சடலத்தை மீட்டுள்ள போலீசார், அஃப்டாப்பின் மூத்த சகோதரருக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி