ஆப்நகரம்

கேரளாவில் முகவரி கேட்பதுபோல் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு!

கேரளாவில், மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல் , அவரது தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்த சம்பவம் நடைந்துள்ளது.

Samayam Tamil 8 Feb 2019, 11:01 am
கேரளாவில், மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல் , அவரது தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்த சம்பவம் நடைந்துள்ளது.
Samayam Tamil jio


கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில், பூஜாப்புரா பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்துள்ளார். அந்த நபர் வழி கேட்பதுபோல் இந்த மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார்.மேலும் விவரமாக வழிச்சொல்லும் மாறு கேட்ட அவர் , மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு இருசக்கர தப்பிச் சென்றுள்ளார் .அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி அவரது இருசக்கர வாகனத்தை பின்தொடர முயற்சித்தபோது அவரை பலமாக அந்த நபர் கிழே தள்ளியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டி பூஜாப்புரா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. முதலில் இது சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில், நடைபெற்றதாக தகவல் பரவியது ஆனால் இது கேரளாவில் நடைபெற்றதாக மலையாள பத்திரிக்கையில் அதிகராப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி