ஆப்நகரம்

பணியிடத்தில் சக ஊழியரை குத்தியாவர் தப்பியோட்டம்: போலீஸ் வலைவீச்சு

பணியிடத்தில் உடன் வேலைபார்க்கும் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ஆண் ஊழியர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 6 Nov 2016, 6:07 pm
புவனேஸ்வர்: பணியிடத்தில் உடன் வேலைபார்க்கும் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ஆண் ஊழியர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man stabs woman colleague at workplace
பணியிடத்தில் சக ஊழியரை குத்தியாவர் தப்பியோட்டம்: போலீஸ் வலைவீச்சு


புவனேஸ்வர் அருகே சந்தசேகர்பூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வந்த பிஷ்ணுபிரியா பாய்க்ரே என்பவரை நிகில் ஜேனா எனும் ஊழியர் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்த பிரியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சைக்குப் பின் தற்போது பிரியா நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரியாவை குத்திவிட்டு தப்பியோடிய நிகிலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருவரும் இந்த நகைக்கடையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாகவும், சம்பவத்தின்போது, இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் நடைக்கடையில் பணிபுரிந்த மற்றவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி