ஆப்நகரம்

மது கடத்தியதாக கைதானவருக்கு கொரோனா: பீதியில் தனிமைப்படுத்தப்பட்ட நீதிபதி, போலீசார்!

மது கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரை விசாரித்த நீதிபதி, போலீசார் உள்பட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Samayam Tamil 25 May 2020, 7:24 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தை பொறுத்தவரை கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், கேரள மாநிலத்துக்கு தமிழகம், கர்நாடாக மாநிலங்களில் இருந்து மதுவகைகள் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனையில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார் மீது இடித்து விட்டு கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது. அதனை மடக்கி பிடித்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காரில் மதுக்கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, திருவனந்தபுரம் கீழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிமன்ற உத்தரவின்படி, பூஜாப்புரா மத்திய சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

முடங்கிப் போன சுற்றுலாத்துறை... கொரோனா படுத்தும் பாடு!

இந்த நிலையில், மதுக்கடத்தியதாக கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவர் ஆஜரான நீதிமன்றத்தின் நீதிபதி, போலீசார், காவல் ஆய்வாளர், சிறைச்சாலை அதிகாரிகள், அரசு மருத்துவமனை ஊழியர்கள், காவல் ஆய்வாளர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையாளப் பட நடிகர்கள் இருவர், எம்.எல்.ஏ ஒருவர் என 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி