ஆப்நகரம்

மாணிக் சர்க்கார் காலில் விழுந்த திரிபுரா முதல்வர் பிப்லாப்

திரிபுரா மாநில முதல்வராக பொறுப்பேற்ற பிப்லாப் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

Samayam Tamil 10 Mar 2018, 11:36 am
அகர்தலா: திரிபுரா மாநில முதல்வராக பொறுப்பேற்ற பிப்லாப் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
Samayam Tamil manik sarkar chief minister for 20 years has moved into one room home
மாணிக் சர்க்கார் காலில் விழுந்த திரிபுரா முதல்வர் பிப்லாப்


திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வந்தது. அண்மையில் நடந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

நேற்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜகவின் பிப்லாப் முதல்வராக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரும் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வராக பதவியேற்ற பிப்லாப், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரின் கால்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசும் போது, “சர்க்காரின் காலில் விழுந்து வணங்கியது நம் பண்பாட்டை மதிப்பதற்காக. சர்க்கார் போன்ற மூத்த தலைவர்களின் அனுபவம் நமக்குத் தேவை.” என்று பிப்லாப் கூறினார்.

அடுத்த செய்தி