ஆப்நகரம்

அதிகரிக்கும் கொரோனா: ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வருகிற 31ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மனிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Aug 2020, 9:13 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கம், நாடு முழுவதும் ஆறாம் கட்டமாக வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் UNLOCK செயல்முறை தொடங்கியுள்ளது. அதன்படி, UNLOCK3 செயல்முறையின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றிவரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்துவருகின்றன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பேரிடர் மேலான்மை சட்டத்தின் கீழ், வருகிற 31ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மனிப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த நாட்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிப்பூர் முதல்வர் பைரன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்துக்கு வெளியே பயணிக்காதவர்கள் அதாவது பயண வரலாறு இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதாகவும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மூன்று தடுப்பூசிகள்... மோடி ஜி அறிவிப்பு!!

மனிப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4390 ஆக ஆதிகரித்துள்ளது. 2,438 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 25,89,682 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 63,490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,62,258 பேர் நாடு முழுவதும் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் விகிதம் 71.91 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,980 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி