ஆப்நகரம்

மத்தியரசின் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கும் முயற்சி பொய்: மன்மோகன் சிங்

2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுவது சாத்தியமற்றது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Jul 2018, 8:54 am
2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுவது சாத்தியமற்றது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cover-pic
விவசாயிகளின் நலனில் பொயுறைக்கும் பாஜக அரசு: மன்மோகன் சிங்


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “அனுபவம் மற்றும் சக்தி நிறைந்தாக செயற்குழு மாற்றப்பட்டுள்ளது. கடந்த காலம், நிகழ் மற்றும் வருங்காலத்தை இணைப்பதாகவும் உள்ளது.

நாட்டு மக்களின் குரலாக காங்கிரஸ் உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மகளிர் போராட வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என மத்திய அரசு கூறுகிறது. அதற்கு விவசாயம் 14 சதவீதம் வரை வளர்ச்சி அடைய வேண்டும்.ஆனால் இது கண்ணுக்கு எட்டியவரை தெரியவில்லை. சமூக அமைதிக்கு உழைக்கும் ராகுலுக்கு ஆதரவளிப்போம்” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சோனியா காந்தி பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அபாயகரமான ஆட்சியாளர்களிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி